அத்வானி ஊசிப் போன ஊறுகாய்-பாரிக்கர்

Subscribe to Oneindia Tamil

பனாஜி: ஊறுகாயை சில நாட்கள் தான் பயன்படுத்த முடியும். அதை தொடர்ந்து வைத்திருந்தால் கெட்டுவிடும். அது போல அத்வானியும் ஊசிப் போன ஊறுகாய் போல ஆகி விட்டார். அவரது அரசியல் வாழ்க்கை கிட்டதட்ட முடிந்துவிட்டது என பாஜக மூத்த தலைவர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான மனோகர் பாரிகர் வரும் டிசம்பரில் ராஜ்நாத் சிங்கின் பதவி காலம் முடிந்தவுடன் அடுத்த பாஜக தலைவராக திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார். ஆர்எஸ்எஸ் ஆதரவைப் பெற்ற இவர் பனாஜியில் நிருபர்களிடம் பேசுகையில்,

அத்வானி இன்னும் ஒரிரு ஆண்டுகள் தான் அரசியலில் இருப்பார். வயதான காரணத்தால் அவரது அரசியல் வாழக்கை நீண்டநாள் ஆன ஊறுகாய் போல் ஊசிப் போய் விட்டது.

பொதுவாக ஊறுகாய்களை சில நாட்கள் தான் பயன்படுத்த முடியும். அதற்கு மேல் அவற்றை வைத்திருந்தால் அது கெட்டுவிடும். அத்வானியின் அரசியல் வாழ்க்கை கிட்டதட்ட முடிந்துவிட்டது. ஆனால், அவர் எங்களுக்கு ஒரு ஆசிரியர் போலிருந்து எப்போதும் வழிகாட்டுவார்.

அவர் தேசிய ஒருமைப்பாடு மிக்க தலைவர். உறுதியானவர். இந்த வகையில் அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.

பாஜக இளமையும், நம்பிக்கையும் கொண்ட கட்சியாக மாற வேண்டும். அதற்காக நான் மூத்த தலைவர்களுக்கு எதிரானவன் என்று சொல்ல முடியாது. பாஜகவில் 40 முதல் 60 வயது உள்ள தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார் 54 வயதான பாரிக்கர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+