டிரைவரை காவு வாங்கிய கார் ஏசி
சென்னை: சென்னையில் ஏசி காரில் தூங்கிய டிரைவர் ஒருவர் விஷ வாயு தாக்கி பலியானார்.
சென்னை கந்தன்சாவடியை சேர்ந்தவர் சுப்பிரமணி (40). அவர் காமராஜர் அவென்யூ வாரியார் காலனியை சேர்ந்த முரளி என்பவரிடம் கார் டிரைவாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று அடையாறு நேரு நகர் பகுதியில் டயோடா குவாலிஸ் காரை நிறுத்திவிட்டு ஏசியை ஆன் செய்துவிட்டு கண் அயர்ந்துள்ளார். அப்போது கார் ஏசியிலிருந்து கசிந்த வாயு தாக்கி அவர் உயிரிழந்தார்.
காரின் சொந்தக்காரர் முரளி, சுப்பிரமணியின் மொபைலுக்கு பல முறை தொடர்பு கொண்டும் அதை யாரும் எடுக்காததால் சுப்பிரமணியின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரித்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை நேரு பகுதி மக்கள் நேற்று மாலையிலிருந்து கார் ஒன்று ஒரே இடத்தில் இருப்பதால் சந்தேகம் அடைந்து அருகில் சென்று பார்த்தனர். அப்போது டிரைவர் அசைவின்றி கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸார் காருக்குள் இருந்து சுப்பிரமணியின் உடலை மீட்டனர்.












Click it and Unblock the Notifications