குமரி: சாஸ்தா கோவில் சிலை உடைப்பு- பதட்டம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே சாஸ்தா கோவிலில் உள்ள சாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திட்டுவிளை வடக்குமாத்தால் பகுதியில் சாஸ்தா கோவில் ஒன்றுள்ளது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் இந்த கோயிலுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் இங்கிருந்த நந்தி மற்றும் நாகர் சாமி சிலைகளை உடைத்துள்ளனர்.
கோவிலுக்கு மது குடித்த அந்த கும்பலை சேர்ந்தவர் பாட்டில்களை அங்கேயே போட்டுள்ளனர். மேலும், சுவர்களில் ஆபாசமாக எழுதியுள்ளனர்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பாஜகவினர் அந்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திடீர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஏற்கெனவே இப்பகுதியில் சதுர்த்தி விழாவின் போது விநாயகர் சிலை உடைக்கப்பட்டதால், அப்பகுதியில் லேசான பதட்டம் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications