சட்டவிரோத குடியேற்றம்-இங்கிலாந்தில் 10 இந்தியர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
லண்டன்: இங்கிலாந்தில் சட்ட விரோதமாகக் குடியேறிய 10 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
லெய்செஸ்டர் நகரில் ஒரு ஜவுளித் தொழிற்சாலையில் ரெய்ட் நடத்திய இங்கிலாந்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் இவர்களைக் கைது செய்தனர்.
இவர்களில் பலர் சட்ட விரோதமாக இங்கிலாந்தில் குடியேறியவர்கள். சிலர் விசா காலம் முடிந்த பிறகும் இங்கிலாந்தில் தங்கியிருந்தவர்கள் ஆவர்.
இவர்கள் அனைவரும் நாடு கடத்தப்படவுள்ளனர். மேலும் இவர்களுக்கு வேலை தந்த ஆலைக்கு 1.1 லட்சம் பவுண்ட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்கள் 24 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications