இந்தோனேசியாவில் 5.2 ரிக்டர் நிலநடுக்கம்
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் 5.2 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவின் தலைநகர் பாடங் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அந்த தீவுக்கு தென் கிழக்கே சுமார் 101 கிமீ தூரத்தில் 20 கிமீ., ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை சுமத்ரா தீவு மக்கள் லேசாக உணர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சில இடங்களில் மட்டும் வீடுகளுக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு நிலநடுக்கம்...
அதே போல் இந்தோனேசியாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் பாலி தீவில் கடந்த 19ம் தேதி அதிகாலை சுமார் 5.30 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து மக்கள் அலறியடித்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினர். மாடியில் இருந்த சிலர் உயிர் பயத்தில் அங்கிருந்த ஜன்னல் வழியாக கீழே குதித்தனர்.
இதில் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் கை, கால் எலும்பு முறிவுகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கம் பாலி தீவில் இருந்து தென்கிழக்கே 101 கிமீ தூரத்தில் மையம் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அது 36 கிமீ., ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.