செக்ஸ் அவசியம்..இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அட்வைஸ்!
இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் மற்றும் மன நல நிபுணர் பேடி அப்டன் ஆகியோர் இணைந்து நான்கு பக்கங்களில் இதுகுறித்து விளக்கி இந்திய வீரர்களுக்குக் கொடுத்துள்ளனராம்.
அதில், செக்ஸ் உறவு வைத்துக் கொண்டால், டெஸ்டோஸ்டிரான் அளவு கூடும். இதனால் உடலுக்கும், மனதுக்கும் புதுத் தெம்பு கிடைக்கும், ஆவேசம் வரும். போட்டிகளில் முழுத் திறமையை வெளிப்படுத்த உதவும். அதற்கு மாறாக சரியான முறையில் செக்ஸ் வைத்துக் கொள்ளாவிட்டால் இவை அனைத்தும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த அறிக்கையில், செக்ஸ் தவிர சரியான முறையில் சாப்பிடுவது, சுய முன்னேற்றம் உள்ளிட்ட பலவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி அங்கு சென்றுள்ளது.
இந்திய அணியினர் செக்ஸ் குறித்து தயக்கமோ, அச்சமோ படக் கூடாது என்றும் கிர்ஸ்டனும், அப்டனும் அட்வைஸ் செய்துள்ளனராம். மேலும் செக்ஸ் குறித்த தவறான நம்பிக்கைகளைக் களையவும் அவர்கள் வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
செக்ஸ் தவிர உணவுப் பழக்க வழக்கம் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. வயிற்றில் அசிடிட்டி ஏற்படாமல் பார்த்துக் கொள்வது எப்படி, உடற்பயிற்சி வழக்கங்கள், சர்க்கரை வியாதி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி, என்னென்ன உணவுகளை உட்கொள்ளலாம் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளதாம்.
இவை தவிர மனதை ஒருமுகப்படுத்தி வைத்துக் கொள்வது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
நான்காவது அம்சமாக, வெளிநாடுகளுக்குப் போய் விளையாடும்போது இந்தியா அதிக அளவில் தோல்வியுறுவது ஏன் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. இதை விளக்க இந்தியாவின் வரலாறு மற்றும் இந்தியா புரிந்த போர்கள் உள்ளிட்டவற்றை மேற்கோள் காட்டி பயிற்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனராம்.
இந்த அறிக்கை இந்திய வீரர்களுக்கு எந்த அளவுக்கு உதவப் போகிறது, புத்துணர்ச்சியுடன் அவர்கள் ஆடுவார்களா என்பதை சாம்பியன்ஸ் டிராபியின் முடிவில்தான் தெரிந்து கொள்ள முடியும்.