திமுகவினருக்கு 'அனிதா' ராதாகிருஷ்ணன் வாட்ச்!

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: திருச்செந்தூர் இடைத்தேர்தலுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் இப்போதோ தயாராகி வருகிறார். திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி ஆகியோரின் உருவம் பொறித்த கடிகாரங்களை வழங்கி உற்சாகப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் அதிமுக திருச்செந்தூர் எம்எல்ஏவாக இருந்த அவர் திமுகவில் இணைந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடக்கப்படுகிறது.

இதில் திமுக சுமார் 35 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என சமீபத்தில் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார். இதையடுத்து திமுகவினர் மத்தியில் தேர்தல் உற்சாகம் கரைபுரள துவங்கிவிட்டது.

திருச்செந்தூரில் திமுக சார்பில் தான் களமிறக்கப்படுவது உறுதி என அனிதா ராதாகிருஷ்ணன் பெரிதும் நம்பியுள்ளார். இதையடுத்து அவர் தற்போதே வார்டு வாரியாக தேர்தல் பணிகளை துவ்ககியுள்ளார்.

சமீபத்தில் தொகுதியில் இருக்கும் சுமார் 2 ஆயிரம் குழுக்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

மேலும் திமுக நிர்வாகிகளை உற்சாகப்படுத்த முதல்வர், துணை முதல்வர், மத்திய அமைச்சர் அழகிரி ஆகியோரின் படம் மற்றும் திமுகவின் உதய சூரியன் சின்னம் பொறித்த 5 ஆயிரம் கடிகாரங்களை திமுகவினருக்கு வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+