'திருவிழா'-முதுகுளத்தூரில் 2 கோவில்களுக்கு பூட்டு!
ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே மாரந்தையில் திருவிழா ஏற்பாடு செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அப்பகுதியில் உள்ள இரண்டு கோவில்களுக்கு வருவாய் துறை பூட்டு போட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்து மாரந்தை அருகில் அரியநாச்சியம்மன் மற்றும் ஆதிவராக பெருமாள் கோயில் உள்ளது. இந்த இரண்டு கோவில்களிலும் சாமி கும்பிடுவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் கடந்த 22 முதல் வரும் 30ம் தேதி வரை திருவிழா நடத்த இளஞ்செம்பூர் போலீஸில் அனுமதி கோரினர். அதே தேதியில் மற்றொரு பிரிவினரும் போலீசாரிடம் அனுமதி கேட்டனர்.
இதையடுத்து கடலாடி தாலுகா அலுவலகத்தில் பரமக்குடி ஆர்டிஓ ஞானக் கண்ணன் தலைமையில், ராமநாதபுரம் ஏடிஎஸ்பி சூர்ய பிரகாசம் முன்னிலையில் சமரச கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே உடன்பாடு ஏற்படாததால் திருவிழா நடத்த அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. மேலும் பிரச்னைக்குரிய மாரந்தையில் உள்ள இரண்டு கோவில்களுக்கும் வருவாய் துறை அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications