ராஜ்யசபா தேர்தல் - புதுவை கண்ணன் மனு தாக்கல்
புதுச்சேரி: புதுச்சேரி ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் அமைச்சரும், 3 முறை காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து மறுபடியும் இணைந்தவருமான கண்ணன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
அக்டோபர் 3ம் தேதி புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு ராஜ்யசபா தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது. நாராயணசாமி ராஜினாமா செய்ததால் காலியிடம் ஏற்பட்டது. இதை நிரப்பவே தற்போது தேர்தல் நடைபெறுகிறது.
காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கண்ணன், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று மனு தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரியான சிவப்பிரகாசத்திடம் தனது மனுவை அவர் அளித்தார். அவரது பெயரை முதல்வர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் முன்மொழிந்திருந்தனர்.
கண்ணனையும் சேர்த்து ஐந்து பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
புதுவை சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணிக்கு 23 உறுப்பினர்கள் (மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 30) உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் 13 பேர் உள்ளனர். திமுக 7, மற்றவர்கள் 3 ஆவர்.
எதிர்க்கட்சியினருக்கு சட்டசபையில் 7 பேர் உள்ளனர். தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications