தமிழ் அகதி முகாம்களை மூட வேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம்
கொழும்பு: இலங்கையில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை போட்டு அடைத்து வைத்திருக்கும் முகாம்களை மூடி விட்டு அங்குள்ள அப்பாவி மக்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் என இலங்கை அரசை உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும் என நியூயார்க்கைச் சேர்ந்த மனித உரிமைக் கண்காணிப்பகம் (Human Rights watch) ஆசிய பிரிவு இயக்குநர் பிராட் ஆடம்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் பிரச்சினை தொடர்பாக ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள இலங்கைப் பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகேவிடம் உலகத் தலைவர்கள் பேசி வலியுறுத்த வேண்டும்.
முகாம்களில் முடக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடிப்படை சுதந்திரம் கூட கிடைக்காத அவல நிலை காணப்படுகிறது.
முகாம்களிலிருந்து ஏராளமான பேர் காணாமல் போயுள்ளனர். இதுகுறித்து இலங்கை அரசு தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். ஆயிரக்கணக்கானோருக்கு உரிய மருத்துவ வசதிகள் கிடைக்காத நிலை காணப்படுகிறது. பெரும்பாலானோர் தங்களது குடும்பத்தினருடன் இணைய முடியாத நிலை உள்ளது. இதையும் இலங்கை அரசு சரி செய்ய வேண்டும் என்று ஆடம்ஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications