ஆயுதம் கேட்கும் ராமேஸ்வரம் மீனவர்கள்!

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள தமிழக அரசு தங்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டும் என்று கோரி ராமேஸ்வரம் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர் மீனவர்கள்.

இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தாக்கி வருவது தொட கதையாகி வருகின்றது.

இந்த தாக்குதலை கண்டித்து, தமிழக மீனவர்கள் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளும் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்களுக்கு பாதுகாப்பு தமிழக அரசு ஆயுதம் வழங்க வேண்டும் என மீனவ மக்கள் கட்சி பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதில், மீனவர்கள் இந்திய குடிமக்களா, இல்லையா , இலங்கை கடற்படையினரின் தாக்குதல் நடவடிக்கையை தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டிப்பதோடு, மீனவர்கள் பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+