For Daily Alerts
Just In
புதுச்சேரி எம்.எல்.ஏ வீட்டில் துணிகர கொள்ளை
புதுச்சேரி: புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ ஜெயக்குமார் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் அவரை இரும்புக் கம்பியால் தாக்கி காயப்படுத்தி விட்டு கொள்ளையடித்துத் தப்பியுள்ளனர். இதனால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மண்ணடிப்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார். இவர் மாநில, இளைஞரணித் தலைவராகவும் உள்ளார்.
இவரது வீட்டில் நேற்று கொள்ளையர்கள் புகுந்தனர். வீட்டில் இருந்த நகை உள்ளிட்ட பொருட்களைத் திருடிக் கொண்டனர். அப்போது அவர்களைப் பார்த்த ஜெயக்குமார் தடுக்க முயன்றார்.
இதனால் ஆத்திரமடைந்த திருடர்கள், ஜெயக்குமாரை இரும்புக் கம்பியால் தாக்கி காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments
Story first published: Saturday, September 26, 2009, 15:56 [IST]