கருணாநிதி தமிழர்கள் மீதும் அக்கறை இல்லாதவர்: பொன்னையன்
சொந்த நாட்டில் அகதிகளாக உள்ள 3 லட்சம் இலங்கை தமிழர்களை மீண்டும் அவரவர் வீடுகளில் குடியமர்த்தக் கோரியும் அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்சனைகளில் பறிபோகும் தமிழக உரிமைகளை பாதுகாக்கக் கோரியும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்தத் தவறியதைக் கண்டித்தும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த இந்த போராட்டத்தை துவக்கி வைத்து பொன்னையன் பேசுகையில்,
இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகியுள்ளனர். கருணாநிதியை பொறுத்தவரை ஈழத் தமிழர்கள் மட்டுமின்றி தமிழகத் தமிழர்கள் மீதும் அக்கறை இல்லாதவர்.
நதி நீர் பிரச்சனைகளில் தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் கருணாநிதி. அதைப்போலவே ஈழத் தமிழர்கள் பிரச்சனையிலும் அவர்களுக்கு துரோகம் செய்து வருகிறார். அவரை மட்டுமல்ல, அவரது குடும்பத்தையே தமிழர்கள் வெறுக்கிறார்கள்.
அகதி முகாம்களில் உள்ள 3 லட்சம் தமிழர்களையும், அவர்களுடைய சொந்த ஊர்களில் குடியமர்த்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டன. இந்த விஷயத்தில் கருணாநிதி மீது தமிழர்கள் கொதிப்புடன் உள்ளனர்.
இதில் சோனியாவும், கருணாநிதியும் தலையிட்டு இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வுரிமையை பெற்றுத்தரா விட்டால் அவர்களை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார் பொன்னையன்.