கடிதங்களால் என்ன சாதித்து விட்டார் கருணாநிதி - ராமதாஸ்

பாலாற்றை காக்க வேலூரில் மும்முனை போராட்டம் நடைபெற்றது. இதில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நதிநீர் பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை, தமிழக மக்களின் பிரச்னைகள் குறித்து தமிழக முதல்வர், மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதிக் கொண்டே இருப்பதாக சொல்கின்றார்.
கடந்த மூன்றாண்டுகளில் இது போல 30 க்கும் மேற்பட்ட கடிதங்களை கருணாநிதி எழுதி இருக்கின்றார். இந்த கடிதம்ங்கள் எழுதி இது வரை அவர் சாதித்தது என்ன என்பதை விளக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறில் எதை செய்தால் மத்திய அரசு அணை கட்ட அனுமதி அளிக்காது என, கருணாநிதி யோசிக்க வேண்டும்.
கர்நாடகத்தைச் சேர்ந்த ஜெயராம் ரமேஷ், மக்களவைத் தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் நின்று வெற்றி பெற்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக உள்ளார். அதற்கு நன்றி கடனாகத் தான் பாலாற்றின் குறுக்கே கணேசபுரத்தில் தடுப்பணை கட்ட விரைவில் அனுமதி அளிக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். டில்லியில் அதிகார பீடத்தில் இருப்பவர்கள் தமிழர்களுக்கு எதிராக செயல்படுகின்றனர்.
எனக்கு வந்த நம்பத்தகுந்த தகவல்கள்படி விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications