For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபை தேர்தல் -அருணாச்சல் முதல்வர் போட்டியின்றி தேர்வு

By Staff
Google Oneindia Tamil News

இடா நகர்: அருணாச்சல் பிரதேச முதல்வர் டோர்ஜி கந்து, தொடர்ந்து 3வது முறையாக போட்டியின்றி தேர்வாகி புதிய சாதனை படைத்துள்ளார்.

அருணாச்சல் பிரதேச மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதுதொடர்பான வேட்பு மனு தாக்கல் முடிந்துள்ளது. நேற்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் முக்தோ தொகுதியில் போட்டியிடும் அருணாச்சல் பிரதேச முதல்வர் டோர்ஜி கந்துவை எதிர்த்து யாருமே போட்டியிடவில்லை. இதையடுத்து அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார். தொடர்ந்து 3வது முறையாக அவர் போட்டியின்றி தேர்வாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சேவாங் டோண்டுப் (தவாங் நகர்), ஜாம்பி தஷி (லும்லா) ஆகியோரை எதிர்த்தும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து அவர்களும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.

இதையடுத்து மொத்தம் உள்ள 60 சீட்களில் 57 தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 13ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X