20வது நூற்றாண்டின் மிகப் பெரிய மதவாதி ஜின்னா - வி.எச்.பி
இந்தூர்: 20வது நூற்றாண்டின் மிகப் பெரிய மதவாதியாக திகழ்ந்தவர் முகம்மது அலி ஜின்னா. அவரைப் புகழ்ந்து, அவரை உயர்த்த முனைபவர்களின் முயற்சிகள் வெற்றி பெறாது என்று விஸ்வ இந்து பரிஷத் மூத்த தலைவர் ஆச்சார்யா தர்மேந்திரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்தூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 20வது நூற்றாண்டின் மிகப் பெரிய மதவாதியாக திகழ்ந்தவர் ஜின்னா என்பதில் யாருமே தவறு காண முடியாது. அவர்தான் பிரிவினைக்குக் காரணம்.
மகாத்மா காந்தி பிரிவினைக்கு எதிராக இருந்தார். ஜின்னாவுக்கு பிரதமர் அல்லது குடியரசுத் தலைவர் பதவியைத் தரவும் அவர் முன்வந்தார். ஆனால் அதை ஜின்னா ஏற்றுக் கொள்ளவில்லை.
அவரைப் பாராட்ட முனைபவர்களுக்கு நிச்சயம் பாராட்டுக்கள் கிடைக்காது.
2005ம் ஆண்டு அத்வானி பாகிஸ்தான் போனபோது, ஜின்னா நினைவிடத்திற்குச் சென்றது மாபெரும் தவறாகும். அந்தத் தவறு இன்று வரை தொடருகிறது என்றார் தர்மேந்திரா.