For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீகாரில் படகு மூழ்கி 11 பேர் பலி - 14 பேரைக் காணவில்லை

By Staff
Google Oneindia Tamil News

ககாரியா (பீகார்): பீகாரில் படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 11 பேர் பலியானார்கள். 14 பேரைக் காணவில்லை.

பீகாரின் ககாரியா மாவட்டத்தில், பாக்மதி ஆற்றில் சென்று கொண்டிருந்த ஒரு படகு இன்று காலை கவிழ்ந்து விழுந்தது. அதில் பயணம் செய்த 7 சிறுமிகள், 2 பெண்கள் உள்பட 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் 14 பேரைக் காணவில்லை. அந்தப் படகில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். மற்றவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 25 பேர் நீந்திக் கரை சேர்ந்தனர்.

விஜயதசமி விழாவுக்குப் போய் விட்டுத் திரும்புகையில் இந்த விபரீதம் ஏற்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X