ராம் லீலா கொண்டாட்டம்-கசாப் கொடும்பாவி எரிப்பு
Subscribe to Oneindia Tamil

தசரா பண்டிகையின்போது வட மாநிலங்களில் ராம் லீலா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் ராமரை உயர்த்தியும், ராவணனின் உருவ பொம்மையை எரித்தும் வட மாநில மக்கள் கொண்டாடுவார்கள்.
ஆனால் போபாலில் இந்த முறை நடந்த ராம் லீலாவில் வினோதமாக, மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டு கைதாகியுள்ள தீவிரவாதி கசாப்பின் உருவ பொம்மையை வைத்து எரித்தனர்.
100 மீட்டர் உயரத்தில் 4 ஆயிரம் கிலோ எடையில் அஜ்மல் கொடும்பாவியை தயாரித்து இருந்தனர். ராம்லீலா விழா தொடங்கியதும் அஜ்மல் கொடும்பாவியை எரித்தனர். அது நீண்ட நேரம் எரிந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிகில் அகர்வால் கூறும்போது, தீவிரவாதி அஜ்மலுக்கு இந்த அரசால் இதுவரை தண்டனை கொடுக்கமுடியவில்லை. எனவே அவனது கொடும்பாவியை எரித்து நாங்கள் தண்டனை கொடுத்தோம் என்றார்.












Click it and Unblock the Notifications