அருணாச்சல்- மீண்டும் சர்ச்சையில் கூகுள்
டெல்லி: அருணாச்சல பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்சனை இருக்கிறது. இதனால் அப்பகுதியை தனித்துக் காட்டியுள்ளோம் என கூகுள் தெரிவித்து புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு கூகுள் எர்த், அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என காட்டியது. இதையடுத்து இந்திய அரசும், மீடியாவும் கடும் புகார் தெரிவிக்க, மாற்றம் செய்தது. பின்னர் தனது தவறுக்காக மன்னிப்பு கேட்டது.
ஆனால் தற்போது மீண்டும் அருணாச்சல பிரதேசத்தை தனி பகுதியாக கூகுள் காட்டியுள்ளது. இது குறித்து கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த சில மாதங்களிக்கு முன் அருணாச்சல பிரதேசத்தை சீன எழுத்துக்களில் வெளியிட்டதை மாற்றிவிட்டோம்.
அதே நேரத்தில் கூகுள் எர்த்தை பொறுத்தவரை உலகில் இருக்கும் பிரச்சனைக்குரிய பகுதிகளை சிவப்பு வண்ணத்தில் சுட்டிகாட்டுவது வழக்கம். தற்போது இதை தான் செய்துள்ளோம் என்று கூறியுள்ளது.
ஆனால், இதை கூகுள் செய்யவில்லை. சில சீன ஹாக்கர்கள் இப்படி கூகுள் இணையத்தை மாற்றி வைப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த சீன ஹாக்கர்கள் அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இணையத் தளத்தை முடக்கினார்கள்.
இதற்கு சீன ராணுவத்துக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது கூகுள்ளும் அவர்களின் தொல்லைக்கு ஆளாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications