கோத்தபாய அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் இந்திய எம்.பிக்கள் பயணம் குறித்து முடிவு - இலங்கை

Subscribe to Oneindia Tamil

Tamils
கொழும்பு: ராஜபக்சேவின் தம்பியும், இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளருமான கோத்தபாய ராஜபக்சே அமெரிக்காவிலிருந்து கொழும்பு திரும்பியதும், இந்திய எம்.பிக்கள் குழுவின் பயணம் குறித்து முடிவு செய்யவுள்ளதாம் இலங்கை.

சமீபத்தில் திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் குழு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, இலங்கையில் உள்ள தமிழர் முகாம்களின் அவல நிலையை எடுத்துக் கூறினர். மேலும் அங்கு எம்.பிக்கள் குழுவை அனுப்பி நிலைமையை ஆராய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், இந்திய எம்.பிக்கள் குழு வருகை குறித்து தங்களுக்கு தகவல் ஏதும் இல்லை என்று இலங்கைத் தூதரகமும், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகமும் தெரிவித்துள்ளன.

அதேசமயம், தற்போது அமெரிக்காவுக்குச் சென்றுள்ள கோத்தபாய ராஜபக்சே கொழும்பு திரும்பியதுதான், இந்திய எம்.பிக்கள் குழுவின் பயணம் குறித்து முடிவு செய்யவுள்ளதாம் இலங்கை அரசு.

தம்பி ஊர் திரும்பியதும் அவருடன் விவாதித்து இந்தியக் குழுவின் பயணத்திற்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளாராம் ராஜபக்சே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+