உலக தமிழ் மாநாடு - கருணாநிதியை கண்டித்து போஸ்டர் - பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் பகுதியில் முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில், உலக தமிழ் மாநாடு நடத்த தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதற்கு ஒரு பக்கம் ஆதரவும், மறுபக்கம் கடும் எதிர்ப்பையும் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விழுப்புரம் பகுதியில் கலெக்டர் அலுவலகம், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உலக தமிழ் நாடு நடத்தும் கருணாநிதியே என துவங்கி கடும் வார்த்தைகளால் விமர்சசனம் செய்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

தமிழர் பேரவை என்ற அமைப்பு இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளது. மேலும் அதில், உலகத் தமிழினமே, நம் இனத்தைக் காத்திட உலகத் தமிழர் மாநாட்டை நடத்துவோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸார் போஸ்டர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+