காஷ்மீர் விவகாரத்தில் தலையிட துடிக்கும் சீனா
பீஜிங்: காஷ்மீர் விவகாரம் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை இதனால் எங்களால் தலையிட முடியாது. அப்படி தலையிடும் வாய்ப்பு கிடைத்தால் எங்களுக்கு மகிழ்ச்சி தான் என சீன வெளியுறவு துணை அமைச்சர் ஹியூ ஜெங்யூ தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலர் தற்போது சீன தலைநகர் பீஜிங் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் ஆசிய பகுதிகளுக்கான சீன வெளியுறவு துணை அமைச்சர் ஹியூ ஜெங்யூவை சந்தித்தனர்.
அந்த சந்திப்பின் போது ஹியூ கூறுகையில்,
ஒரு நட்பு நாடு என்ற முறையில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள முன்னேற்றம் சீனாவுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
காஷ்மீர் வரலாற்று காலம் முதல் ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பல முறை சுமூக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். இது இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை என்பதால் எங்களால் தலையிட முடியாது.
தலையிடும் வாய்ப்பு கிடைத்தால் எங்களுக்கு மகிழ்ச்சி தான் என்றார்.












Click it and Unblock the Notifications