நேபாளத்தில் சர்ச் இடிந்து 24 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காத்மாண்டு: நேபாளத்தில் மாதா கோயில் இடிந்து விழுந்ததில் இந்தியர் உள்பட 24 பேர் பலியாயினர். மேலும் 62 பேர் காயமடைந்துள்ளனர்.
சன்சாரி மாவட்டத்தில் தரன் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. அந்த ஆலயத்தில் ஒரு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற 1500க்கும் மேற்பட்டோர் மாநாடு முடிந்த பின் அங்கேயே உறங்கினர்.
அப்போது மூன்றடுக்கு கொண்ட அந்த ஆலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 17 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 24 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதில் இந்தியரும் ஒருவர்.
மீட்பு பணியில் நேபாள ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்திய எல்லையில் இந்த ஆலயம் அமைந்துள்ளதால் ஏராளமான இந்தியர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications