நாகர்கோவில் 5 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி
நாகர்கோவில்: நாகர்கோவில் பன்றி காய்ச்சல் நோய் அறிகுறிகளுடன் நேற்று 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தமிழகத்தி்ல சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்து நாகர்கோவிலில் தான் பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு இதுவரை சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் ஆசாரிபள்ளம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இங்கு சிகிச்சை பெற்று வந்த வத்சலகுமாரி என்ற பெண் கடந்த 22ம் தேதியும், நிஷா என்ற 8 மாத கர்ப்பிணி பெண் நேற்றும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.
இந்த அடுத்தடுத்த இரண்டு சம்பவங்கள் நாகர்கோவில் மக்களை பெரும் பீதிக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் இந்த நோய்க்கு பலியான வத்சலகுமாரியின் கணவர் மனோகரன், மகன்கள் மனோஜ், கிருஷ்ணபிரசாத் ஆகியோரும் பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் ராமன்புதூரை சேர்ந்த வில்லியம் என்பவரது மனைவி பெலிக்ஸ், வடசேரியை சேர்ந்த பிரான்சிஸ் ஆகியோரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெலிக்ஸ் லண்டனில் இருக்கும் தனது மகனை பார்த்து விட்டு சில நாட்களுக்கு முன் தான் ஊருக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடைய பலியான நிஷாவின் ஊரில் சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் 309 பேர் பலி...
நேற்று மட்டும் இந்தியாவில் இந்த காய்ச்சலுக்கு சுமார் 6 பேர் பலியாகியுள்ளனர். டெல்லியில் இரண்டு பேரும், டெல்லி, ஆந்திரா, கேரளா, ஹரியானாவில் தலா ஒருவர் பலியாகி வருகின்றனர்.
இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications