157 பேரை சுட்டு தள்ளிய கினியா ராணுவம்-பெண்கள் கற்பழிப்பு
கினியா: கினியாவில் ராணுவ ஆட்சியாளருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் சுமார் 157 பேரை ராணுவம் சுட்டு கொன்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட பல பெண்களின் கற்பு சூறையாடப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவின் அதிபராக இருந்த லன்சானா கோன்டே கடந்த டிசம்பரில் மரணமடைந்தார். இதையடுத்து ராணுவ தளபதியாக இருந்த மௌசா டாடிஸ் காமரா அதிபராக பதவியேற்று கொண்டார்.
அப்போது அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அவர் தான் தேர்தல் வரைக்கும் தான் பதவியில் இருக்க போவதாகவும், மேலும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனவும் உறுதியளித்தார்.
இந்நிலையில் தற்போது அவர் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் தான் போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் தேர்தலின் போது அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி ஆட்சியை மீண்டும் பிடிக்க திட்டமிட்டிருப்பதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டின.
இதையடுத்து நேற்று முன்தினம் சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டு கோனக்ரி நகரில் காமராவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் அமைதியாக ஒரு மைதானத்தில் கூடியிருந்த போது, அங்கு வந்த ராணுவம் அவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டது.
இதில் சுமார் 157 பேர் இறந்தனர். அவர்களில் 128 பேரின் உடல்கள் அந்நகர மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 1200 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராணுவ வீரர்கள் பல பெண்களிடம் அநாகரீக நடந்து கொண்டதாகவும், பலரையும் தூக்கி சென்று கற்பழித்ததாகவும் கூறப்படுகிறது.
இரண்டு நாள் துக்கம்...
ஆனால், அதிபர் கூறுகையில்,
இந்த தாக்குதலுக்கு நான் உத்தரவிடவில்லை. கூட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் காரணமாக ராணுவம் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மேலும், இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றார்.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு!












Click it and Unblock the Notifications