157 பேரை சுட்டு தள்ளிய கினியா ராணுவம்-பெண்கள் கற்பழிப்பு
கினியா: கினியாவில் ராணுவ ஆட்சியாளருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் சுமார் 157 பேரை ராணுவம் சுட்டு கொன்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட பல பெண்களின் கற்பு சூறையாடப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவின் அதிபராக இருந்த லன்சானா கோன்டே கடந்த டிசம்பரில் மரணமடைந்தார். இதையடுத்து ராணுவ தளபதியாக இருந்த மௌசா டாடிஸ் காமரா அதிபராக பதவியேற்று கொண்டார்.
அப்போது அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அவர் தான் தேர்தல் வரைக்கும் தான் பதவியில் இருக்க போவதாகவும், மேலும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனவும் உறுதியளித்தார்.
இந்நிலையில் தற்போது அவர் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் தான் போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் தேர்தலின் போது அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி ஆட்சியை மீண்டும் பிடிக்க திட்டமிட்டிருப்பதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டின.
இதையடுத்து நேற்று முன்தினம் சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டு கோனக்ரி நகரில் காமராவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் அமைதியாக ஒரு மைதானத்தில் கூடியிருந்த போது, அங்கு வந்த ராணுவம் அவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டது.
இதில் சுமார் 157 பேர் இறந்தனர். அவர்களில் 128 பேரின் உடல்கள் அந்நகர மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 1200 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராணுவ வீரர்கள் பல பெண்களிடம் அநாகரீக நடந்து கொண்டதாகவும், பலரையும் தூக்கி சென்று கற்பழித்ததாகவும் கூறப்படுகிறது.
இரண்டு நாள் துக்கம்...
ஆனால், அதிபர் கூறுகையில்,
இந்த தாக்குதலுக்கு நான் உத்தரவிடவில்லை. கூட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் காரணமாக ராணுவம் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மேலும், இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications