டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி புதிய தமிழகம் நாளை பேரணி
சென்னை: ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாளை புதிய தமிழகம் கட்சியினர் டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி பேரணி நடத்த இருக்கின்றனர்.
இது குறித்து கிருஷ்ணசாமி நேற்று சென்னையில் வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கை முள்வேலி முகாம்களில் 3 லட்சம் தமிழர்கள் உணவு, குடிநீர், உடை, உறையுள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இது உச்சக்கட்ட மனித உரிமை மீறல் பிரச்சினை ஆகும்.
தமிழர்களை முள்வேலியில் அடைத்து வைத்த சம்பவத்திற்கு மேலை நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், இதுநாள் வரை இந்திய அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை. இது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.
இதை கண்டிக்கும் வகையிலும், முடங்கிக்கிடக்கும் தமிழர்களுக்கு விடிவு கிடைக்க வேண்டியும், அவர்கள் தங்களது சொந்த ஊர்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என கோரியும் நாளை 02.10.09 அன்று டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி பேரணி நடைபெறும்.
பேரணியின் போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தினச்சம்பளமான 100 ரூபாயை முறையாக வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துவோம்.
பிரதமர் மன்மோகன், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். கிடைத்தால் அவர்களிடம் இது குறித்து மனு கொடுப்போம் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த பேரணியில் கலந்து கொள்ள நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் புதிய தமிழகம் தொண்டர்கள் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications