தீபாவளி-40 லட்சம் டன் பிரேசில் சர்க்கரை இறக்குமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி சமயத்தில் சர்க்கரை விலை இரு மடங்கு அதிகரித்துள்ளதை அடுத்து தமிழக அரசு பிரேசிலில் இருந்து 40 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதி செய்யவிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன் ரூ.15க்கு விற்ற 1 கிலோ சர்க்கரை தற்போது ரூ.32 வரை உயர்ந்துள்ளது. வறட்சி, கரும்பு உற்பததி 50 சதவிதமாக குறைந்தது மற்றும் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.1,550 ஆக விலையை உயர்த்தப்பட்ட கொள்முதல் விலை ஆகியவை இந்த ஏற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் 20 கூட்டுறவு ஆலை, 18 தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் தனியார் ஆலையில் உற்பத்தியாகும் சர்க்கரையில் 10 சதவீதத்தை அரசு எடுத்துக் கொள்கிறது. மீதமுள்ள 90 சதவீதத்தை அரசு அனுமதியுடன் வெளிமார்கெட்டில் விற்கப்படுகிறது.

இந்நிலையில் சர்க்கரை விலை உயர்வை கட்டுபடுத்த வெளிநாட்டில் இருந்து சர்க்கரை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி ஒவ்வொரு தனியார் சர்க்கரை ஆலையும் ஆஸ்திரேலியா, பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து 3 லட்சம் டன் வரை மொத்தம் 40 லட்சம் டன் சர்க்கரையை இறக்குமதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் 15ம் தேதிக்குள் முழுவதும் இறக்குமதி செய்யப்பட்டு விடும். அதிக இறக்குமதியால் சர்க்கரை விலை குறைய வாய்ப்புள்ளது.

இது குறித்து நெல்லை தனியார் சர்க்கரை ஆலையை சேர்ந்த ஒருவர் கூறுகையில், தமிழக அரசு உத்தரவு படி நாங்கள் பிரேசிலில் இருந்து 2 லட்சன் டன் சர்க்கரை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+