ஸ்வைன்-புனேவில் எய்ட்ஸ் நோயாளி மரணம்-இந்தியாவில் 344 பேர் பலி
புனே: பன்றி காய்ச்சல் நோய்க்கு புனேவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து இந்தியாவில் பலி எண்ணிக்கை 344 ஆக அதிகரித்துள்ளது.
புனேவின் பிம்பிரி பகுதியில் இருக்கும் ஓய்சிஎம் மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் ஒருவன் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
இந்நிலையில் நேற்று அவன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தான். மேலும் ஹடப்சார் பகுதியில் வசித்து வந்த மதுகர் கோட்டே (45) சசுன் மருத்துவமனையில் இறந்தனர். இதையடுத்து புனேவில் பலியானவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.
சாங்கிலி நகரை சேர்ந்த கிருஷ்ணதேவ் மகாஜன் (35) என்பவரும் நேற்று பலியானார். இதையடுத்து இந்திய அளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் 139, கர்நாடகாவில் 99, ஆந்திராவில் 36, குஜராத்தில் 35, டெல்லியில் 14 பேர் பலியாகியுள்ளனர். மற்ற மாநிலங்களில் ஒற்றை இலக்கத்தில் பலி எண்ணிக்கையில் தான் உள்ளது.












Click it and Unblock the Notifications