முதல்வர் அலுவலகத்திற்குள் பிரவேசித்தார் ரோசய்யா

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கடந்த ஒரு மாத காலமாக முதல்வரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்திற்கு செல்லாமல் இருந்த முதல்வர் ரோசய்யா, நேற்று முதல்வரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்திற்குள் பிரவேசித்தார்.

இதன் மூலம் ஆந்திர மாநில முதல்வர் பதவியில் புதியவரை அமர்த்தும் எண்ணம் காங்கிரஸ் மேலிடத்திடம் இல்லை என்பது காங்கிரஸ் கட்சி மறைமுகமாக உணர்த்தியுள்ளது.

ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்ததைத் தொடர்ந்து செப்டம்பர் 3ம் தேதி இடைக்கால முதல்வராக அறிவிக்கப்பட்டார் ரோசய்யா. இருப்பினும் முதல்வர் பதவியை ஏற்ற அவர், முதல்வர் அலுவலகத்திற்குச் செல்லாம்ல தனது (நிதியமைச்சகம்) அலுவலகத்திலிருந்தபடியே பணிகளைப் பார்த்து வந்தார்.

இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது எனக்கு இன்னும் ராஜசேகர ரெட்டியின் நினைவாகவே உள்ளது. அவரது அலுவலகத்தில் அவர் இன்னும் இருப்பதாகவே உணர்கிறேன். எனவே நேரம் வரும்போது அங்கு செல்வேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் முதல்வராகப் பதவியேற்று ஒரு மாதம் ஆன நிலையில் நேற்று முதல்வர் அலுவலகத்திற்குப் பிரவேசித்தார் ரோசய்யா.

நேற்று காலை வேத பண்டிதர்கள் பூஜை நடத்திய பின்னர் அலுவலகத்திற்குள் நுழைந்தார் ரோசய்யா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+