'ராகுல் போதும், காந்தி வேண்டாம்'-ராகுல் காந்தி
திருவனந்தபுரம்: என்னை ராகுல் என்றே கூப்பிடலாம். அதைத்தான் நானும் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி.
திருவனந்தபுரம் வந்த ராகுல் காந்தி அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஒரு நிருபர் கேள்வி கேட்பதற்காக ராகுல் என்று விளித்தார். பின்னர் அதை திருத்திக் கொண்டு ராகுல் காந்தி என்று அழைத்தார்.
இதையடுத்து குறுக்கிட்ட ராகுல் காந்தி, என்னை நீங்கள் ராகுல் என்றே அழைக்கலாம். நானும் அதையே விரும்புகிறேன் என்றார்.
ஏன் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளாமல் உள்ளீர்கள் என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, நான் வர வர ரொம்ப பிசியாகி விட்டேன். என்னை நானே பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. பலரும் அப்படித்தான் சொல்கிறார்கள் என்றார் சிரித்துக் கொண்டே.
தமிழகத்தைப் போலவே தற்போது கேரளாவிலும் இளைஞர் காங்கிரஸை வலுப்படுத்தும் முயற்சியாக 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications