பிளேடால் சிசுவின் கழுத்தை அறுத்து கொன்ற கொடூர தாய், பாட்டி கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பிறந்த சில நாட்களே ஆன இரண்டு பெண் குழந்தைகளின் கழுத்தை பிளேடால் அறுத்து கொன்ற தாய் மற்றும் பாட்டியை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியை சேர்ந்தவர் துரைப்பாண்டி. வயது 28. ஆட்டோ டிரைவரவான இவருக்கு ரேவதி என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.
இந்நிலையில் 7 மாத கர்ப்பமாக இருநத ரேவதிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கடந்த 24ம் தேதி குறைபிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. பிறந்த 2 பெண் குழந்தைகளும் எடை குறைவாகவும், முழு வளர்ச்சியில்லாமலும் இருந்தது.
இதனால் அந்த குழந்தைகளை இன்குபெட்டரில் வைத்து சிகி்ச்சை அளித்து வருகின்றனர். தினமும் காலை, மதியம், இரவு நேரங்களில் மட்டும் குழந்தைகளுக்கு பால் கொடுக்க வேண்டும் என்பதால் ரேவதி அப்போது வந்து வார்டு நர்ஸ்களிடம் குழந்தையை வாங்கி செல்கிறார்.
அதே போல் இன்று காலை இரு குழந்தைகளையும், தாய் ரேவதி, மாமியார் தேனிலா ஆகியோர் வாங்கி சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து குழந்தைகளை கொண்டு வந்து கொடுத்தனர்.
அப்போது பணியில் இருந்த நர்ஸ்கள் குழந்தைகளை வாங்கி இன்குபெட்டரில் வைக்க சென்றனர். அப்போது ஒரு குழந்தையின் கழுத்து வெட்டப்பட்டு ரத்தம் வழிந்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த நர்ஸ்கள், இரு குழந்தைகளையும் பரிசோதித்தனர். அப்போது இரு குழந்தைகளும் இறந்திருந்தது தெரிய வந்தது.
உடனே குழந்தைகளின் தாய் மற்றும் பாட்டியை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் நாங்கள் எதுவும் செய்யவில்லை, நீங்கள்தான் குழந்தையை கொன்று விட்டீர்கள் என குற்றம் சாட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீஸார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசராணையில் தாய் ரேவதி, மாமியார் தேனிலாவும் சேர்ந்து ஒரு குழந்தையின் கழுத்தை பிளேடால் அறுத்தும், மற்றொரு குழந்தையின் கழுத்தை நெறித்தும் கொன்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications