டி.ஆர்.பாலு வெற்றியை எதிர்த்து வழக்கு - முதல்வர் பிரதிவாதியாக சேர்ப்பு
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில், திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றதை எதிர்த்து அத்தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தோற்ற நாகராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் முதல்வர் கருணாநிதி, போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரை அவர் பிரதிவாதிகளாக சேர்த்துள்ளார். ஆனால் இவர்களை பிரதிவாதிகளாக சேர்க்க முடியுமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு அட்வகேட் ஜெனரலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இதே தொகுதியில், பாமக சார்பில் போட்டியிட்டுத் தோற்ற ஏ.கே.மூர்த்தியும் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், சுயேச்சை வேட்பாளர் நாகராஜன் என்பவர் புதிதாக ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், தேர்தல் சமயத்தில் பஸ் கட்டணத்தை குறைந்ததால் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார். எனவே இந்தத் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று கோரியுள்ளார். வழக்கின் பிரதிவாதிகளாக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு, முதல்வர் கருணாநிதி ஆகியோரை சேர்த்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ராஜேஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வரையும், அமைச்சரவையும் பிரதிவாதிகளாக சேர்க்கலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு அட்வகேட் ஜெனரலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications