லெனின் கைதுக்கு பத்திரிக்கையாளர் அமைப்புகள் கண்டனம்
சென்னை: தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு செய்தியாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து சென்னை சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை:
தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர் லெனினை, போலீசார், அலுவலகத்திற்குள் நுழைந்து கைது செய்த விதத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இது ஜனநாயக விதிமுறைகளை மீறுவதாகும். போலீசாரின் இந்த நடவடிக்கை பத்திரிகையையும், பத்திரிகையாளர்களையும் மிரட்டுவதாக உள்ளது.
தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம்:
தினமலர் செய்தி ஆசிரியர் லெனினை, அத்துமீறியும், அவசியமின்றியும் தமிழக போலீசார் கைது செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இப்பிரச்னை தொடர்பாக, தினமலர் பத்திரிகை வருத்தம் தெரிவித்த பிறகும், கைது நடவடிக்கை அரங்கேறியுள்ளது.
அத்துமீறிய போலீசார் மீது, உடனே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். லெனினை, நிபந்தனையின்றி விடுதலை செய்யாவிடில், போராட்டத்தில் ஈடுபடுவோம்.
பிரஸ் கிளப், பத்திரிகையாளர் சங்கம்:
லெனின் கைது செய்யப்பட்டதற்கு, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர் ரவீந்திரதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை பிரஸ் கிளப் இணைச் செயலர் பாரதி தமிழன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் “காவல் துறையினரின் இந்த செயல் கண்டனத்துக்குரியது. 'தினமலர்" செய்தி ஆசிரியர் லெனினை விடுதலை செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இன்று பிற்பகல் பிரஸ் கிளப்பில் சிறப்புக் கூட்டம் நடக்கிறது.
ராமநாதபுரம், நாகர்கோவில், ஈரோடில் ஆர்ப்பாட்டம்...
இதற்கிடையே, லெனின் கைதுக்குக் கண்டனம் தெரிவித்து ராமநாதபுரத்தில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் பிரஸ் கிளப் அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிரஸ் கிளப் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். இதில் தினமலர், தினமணி, ராஜ் டிவி, ஜெயா டிவி, ஜீடிவி, எஸ்டிவி, தமிழோசை உள்ளிட்ட பத்திரிக்கை மற்றும் டிவிகளைச் சேர்ந்த நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள், வீடியோகிராபர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில், ஈரோடு, சேலம் ஆகிய நகரங்களில் உள்ள பிரஸ் கிளப்கள், லெனின் கைதுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.
மேலும், இந்த நகரங்களின் பிரஸ் கிளப்கள் இணைந்து ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications