கேரள அணை: தமிழகம் பிரச்சினை செய்கிறதாம் - கூறுகிறார் பரதன்
திருவனந்தபுரத்தில் உட்கார்ந்து கொண்டு இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
முல்லை பெரியாறு அணை 113 ஆண்டுகள் பழமையானது. இதனால் தான் கேரள அரசு அதன் பாதுகாப்பு மற்றும் அபாயம் குறித்து கவலைப்படுகிறது. அணையில் இருக்கும் நீரின் அழுத்தமா காரணமாக அணைக்கு பாதிப்பு ஏற்படலாம்.
புதிய அணை கட்டுவதற்கு நில அளவை மேற்கொள்ள தமிழகம் ஏன் இவ்வளவு சர்ச்சைகளை உண்டாக்குகிறது என்பது தெரியவில்லை. மனக்கசப்பு மற்றும் சர்ச்சைகளை வளரவிடக்கூடாது.
இருமாநில அரசியல் தலைவர்களும் சந்தித்து பேச்சு வார்த்தையின் மூலம் நல்ல முடிவுக்கு வர வேண்டும். மக்களின் மனதில் இருப்பவற்றுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றார்.
பரதன் பேச்சுக்கு தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
இதே நிலையை தமிழகத்திற்கு வரும்போதும் பரதன் மேற்கொள்வாரா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.