For Daily Alerts
Just In
தனித்துப் போட்டி- இல்லாவிட்டால் பாமக வேண்டாம்: பாமக எம்.எல்.ஏ
சேலம் மாவட்ட பா.ம.க.செயற்குழு கூட்டம், அக் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் இடைப்பாடி எம்.எல்.ஏ. காவேரி பேசுகையில்,
தமிழகத்தில் உள்ள கட்சிகள், தனித்து போட்டியிட தயார் என்றால், பா.ம.க- வும் போட்டியிட தயாராக உள்ளது. அ.தி.மு.க- தி.மு.க கூட்டணிக்கு செல்லாமல், தனித்து தான் போட்டியிட வேண்டும் என, பா.ம.க தலைவர் மற்றும் நிறுவனரை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அடுத்து, ஓமலூர் எம்.எல்.ஏ - தமிழரசு பேசுகையில்,
பா.ம.க. தோன்றிய காலத்திலேயே தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சி. இனி வரும் தேர்தல்களிலும் தனித்து போட்டியிடுவோம். இல்லை என்றால், கட்சியை விட்டு வெளியேறி சங்கமாக செயல்படுவோம் என்றார்.
தமிழரசுவின் பேச்சு பாமக வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம்.
Comments
Story first published: Friday, October 9, 2009, 11:41 [IST]