பெரும் மழையால் நிலச்சரி - பிலிப்பைன்ஸில் 90 பேர் பலி
பெங்கட் (பிலிப்பைன்ஸ்): பிலிப்பைன்ஸின் பெங்கட் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 90 பேர் உயிரிழந்தனர். கன மழை காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.
பிலிப்பைன்ஸைத் தாக்கிய பர்மா புயல் காரணமாக பெய்த கடும் மழை மற்றும் நிலச்சரிவால் பெங்குட் மாகாணமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
வியாழக்கிழமை பிற்பகல் முதலே நிலச்சரிவு தொடங்கி விட்டது. இரவு முழுவதும் நிலச்சரிவு தொடர்ந்தது. பிலிப்பைன்ஸைத் தாக்கிய பர்மா புயல் காரணமாக பெரும் மழை பெய்து பெங்குட் மாகாணத்தையே புரட்டிப் போட்டுள்ளது.
இந்த புயல் மற்றும் பெரும் மழை காரணமாக 32 நகரங்கள், 2 பெரு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பயம்பாங், அல்கலா, பசிஸ்டா ஆகியவை பெரும் பாதிப்புக்குள்ளான பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் உயரமான கட்டடங்களுக்கு இடம் பெயர்ந்து தஞ்சமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 16 ரப்பர் படகுகள் மூலம் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
மீட்புப் பணிகளுக்காக அமெரிக்க கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது. விரைவில் அமெரிக்க மீட்புப் படையினர் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பர்மா புயல் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு பிலிப்பைன்ஸில் மழை கொட்டித் தீர்த்து விட்டது.












Click it and Unblock the Notifications