ராமதாஸ் தமிழக அரசியலை பிடித்த பிணி-சேதுராமன்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக கேட்டுப்பெற்ற 7 தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வியடைந்தது. வாக்காளர்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை. அக்கட்சியை மக்கள் விரும்பவில்லை என்பதை நாடாளுமன்ற தோல்விக்குப் பிறகும் ராமதாஸ் ஏற்றக்கொள்ள மறுக்கிறார்.
மக்கள் விரும்பினால் மூன்றாவது அணி அமையும், தலைமை தாங்க தயார் என்று தனக்குத்தானே தலைமை பீடம் தாங்கிக்கொண்டு தன்தலையில் அட்சதை போட்டுக் கொண்டு ஏமாற்றப் பார்க்கிறார் ராமதாஸ்.
அவரது கடந்த கால அரசியல் வாழ்க்கையை புரட்டிப்பார்த்தால் அவரது பின்னால் சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். சொந்த காரர்களுக்காக, ராமதாஸூடைய நலனுக்காக தொடங்கப்பட்ட இயக்கம் வன்னியர் சங்கம்.
ஆட்சி அதிகாரத்தில் வன்னிய மக்களுக்கு சேர வேண்டிய உரிமையை பெற்றுத்தருவதற்காக திண்டிவனத்தில் பேராசிரியர் ராஜேந்திரன் (எ) தீரனை தலைவராக்கி தொடங்கப்பட்ட கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. பாட்டாளி மக்கள் கட்சிக்காக உழைத்து, உருக்குலைந்து போனவர்கள் பட்டியல் மிக நீளம்.
மருத்துவர் ராமதாஸால் தமிழகத்தில் மாற்று அணி உருவாக்கவே முடியாது. அப்படி ஒரு காலச்சூழ்நிலை ஏற்படாது. புதுச்சேரியில் ஆட்சியமைப்பேன் என்று கொக்கரித்தார். 2011ல் தமிழ்நாட்டில் பாமக தலைமையில் ஆட்சி அமையும் என்றார். இப்பொழுது மூன்றாவது அணி என்கிறார்.
ராமதாசை நம்பி ஏமாந்தவர்களும், வாக்காளர்களும் ராமதாசை அரசியல் பிணி என்று புரிந்துகொண்டு விட்டார்கள். எனவே ராமதாஸ் தமிழ்நாட்டு அரசியலில் மீண்டும் தலைதூக்க முயற்சிப்பது நடைமுறைக்கு வராது என அந்த அறிக்கையில் சேதுராமன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications