For Daily Alerts
Just In
அமைச்சர் செல்வராஜுக்கு திடீர் நெஞ்சு வலி - நிகழ்ச்சி ரத்து
ஊட்டி: தமிழக வனத்துறை அமைச்சர் செல்வராஜுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டத் தலைநகர் ஊட்டியில் வன விலங்கு பாதுகாப்பு வார விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வனத்துறை அமைச்சர் செல்வராஜ் பங்கேற்பதாக இருந்தது.
இதற்காக ஊட்டிக்கு வந்திருந்தார் அமைச்சர் செல்வராஜ். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் வேகமாக வரவழைக்கப்பட்டனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஹை பிளட் பிரஷர் காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் கலந்து கொள்வதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஓய்வுக்குப் பின்னர் அமைச்சர் செல்வராஜ் ஊட்டியிலிருந்து சேலம் புறப்பட்டுச் சென்றார்.
Comments
Story first published: Sunday, October 11, 2009, 16:34 [IST]