சிஇஓக்கள் சம்பளத்தைக் கட்டுப்படுத்தும் திட்டம் இல்லை- பிரதமர்
Subscribe to Oneindia Tamil
மும்பை: தலைமை செயல் அதிகாரிகளின் சம்பள விகிதங்களை கட்டுப்படுத்தும், குறைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
சிஇஓக்கள் எனப்படும் தலைமை செயல் அதிகாரிகளுக்கான சம்பள நிர்ணயம் குறித்து கடும் விவாதம் நடந்து வருகிறது. இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதிலளிக்கையில், சம்பளம் தொடர்பாக எந்தவிதமான கட்டுப்பாட்டையும், விதிமுறைகளையும் புகுத்த அரசிடம் திட்டம் ஏதும் இல்லை. இது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர் போர்டுகளைச் சேர்ந்தது.
பல்வேறு நிறுவனங்களின் இயக்குநர் போர்டுகளும் சிறப்பா முறையிலேயே சம்பளங்களை வழங்கி வருவதாக நாங்கள் நம்புகிறோம். எனவே அதில் தலையிடவோ, கட்டுப்படுத்தவோ, கட்டுப்பாடுகளை விதிக்கவோ அரசு திட்டமிடவில்லை என்றார் பிரதமர்.












Click it and Unblock the Notifications