நீதிபதி தினகரனை நீக்க கோரும் ராம் ஜேத்மலானி
டெல்லி: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதபிதி பி.டி.தினகரனின் பதவி உயர்வை நீதிபதிகள் நியமனம் மற்றும் பதவி உயர்வு தொடர்பான காலேஜியம் நிறுத்தி வைத்துள்ளது. எனவே அவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ராம் ஜேத்மலானி கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதிபதி பி.டி.தினகரன் வருமானத்திற்கு மீறிய வகையில் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் பெருமளவில் சொத்துக்கள் வாங்கியதாக சர்ச்சை கிளப்பபப்ட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் தற்போது தினகரனின் பதவி உயர்வை மட்டும் நிறுத்தி வைத்துள்ளது. அவருடன் சேர்த்து பட்டியலில் இடம் பெற்றிருந்த பிற தலைமை நீதிபதிகளின் பெயர்களை பதவி உயர்வுக்கு அது அனுமதித்துள்ளது.
இந்த நிலையில், தினகரனை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பல்வேறு பெரும் ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடிப் புகழ் பெற்ற ராம் ஜேத்மலானி கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான புகார்களைப் பரிசீலித்த பின்னர் அதில் முகாந்திரம் இரு்பபதாக கருதிய பின்னர்தான் அவரது பதவி உயர்வை காலேஜியம் நிறுத்தி வைத்துள்ளது. அப்படி இருக்கையில், எப்படி பி.டி.தினகரன் நீதிபதி பதவியில் நீடிக்க முடியும். எனவே அவரை நீக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications