'பாரதிராஜா' பேச்சு- கோர்ட்டில் வைகோ ஆஜர்
சென்னை: இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் முதல்வர் கருணாநிதிக்கு தொடர்பு இருப்பதாக பேசியதை அடுத்து தொடரப்பட்ட அவதூறு வழக்கில் மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சென்னையில் கடந்த மே 30ம் தேதி அன்று புரசைவாக்கத்தில் நடந்த இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ, இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதற்கும் தமிழக முதல்வருமான கருணாநிதிக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ மீது கருணாநிதி சார்பில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை சமீபத்தில் விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என வைகோவுக்கு சம்மன் அனுப்பியிருந்தார்.
இதையடுத்து அவர் இன்று நீதிமன்றம் வந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
பயனில்லாத இலங்கை பயணம்...
இந்நிலையில் நீதிமன்றத்துக்கு வெளியே நிருபர்களை சந்தித்த வைகோ கூறுகையில்,
பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பேசியதற்காக 2 வழக்குகள் போட்டுள்ளனர். ஒன்று திமுக தொடர்ந்தது. மற்றொன்று தமிழக அரசு தொடர்ந்தது. ஒரே பிரச்சினைக்காக 2 வழக்குகள் போடப்பட்டிருப்பது விசித்திரமானது.
மதிமுக எந்த பிரச்சனையையும் சந்திக்க தயாராக இருக்கிறது. ஈழத்தில் போர் நடப்பதற்கு இந்திய அரசு தான் காரணம். ஐநா கேட்டு கொண்ட போதிலும் போர் நிறுத்தப்படவில்லை.
ரத்தம் தோய்ந்த கரங்களுடன் ராஜபக்சே விடுத்த அழைப்பை ஏற்று தான் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றுள்ளனர். இது வெறும் கண்துடைப்பு. இதனால் எந்த பயனும் இருக்காது என்றார்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications