'பாரதிராஜா' பேச்சு- கோர்ட்டில் வைகோ ஆஜர்
சென்னை: இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் முதல்வர் கருணாநிதிக்கு தொடர்பு இருப்பதாக பேசியதை அடுத்து தொடரப்பட்ட அவதூறு வழக்கில் மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சென்னையில் கடந்த மே 30ம் தேதி அன்று புரசைவாக்கத்தில் நடந்த இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ, இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதற்கும் தமிழக முதல்வருமான கருணாநிதிக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ மீது கருணாநிதி சார்பில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை சமீபத்தில் விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என வைகோவுக்கு சம்மன் அனுப்பியிருந்தார்.
இதையடுத்து அவர் இன்று நீதிமன்றம் வந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
பயனில்லாத இலங்கை பயணம்...
இந்நிலையில் நீதிமன்றத்துக்கு வெளியே நிருபர்களை சந்தித்த வைகோ கூறுகையில்,
பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பேசியதற்காக 2 வழக்குகள் போட்டுள்ளனர். ஒன்று திமுக தொடர்ந்தது. மற்றொன்று தமிழக அரசு தொடர்ந்தது. ஒரே பிரச்சினைக்காக 2 வழக்குகள் போடப்பட்டிருப்பது விசித்திரமானது.
மதிமுக எந்த பிரச்சனையையும் சந்திக்க தயாராக இருக்கிறது. ஈழத்தில் போர் நடப்பதற்கு இந்திய அரசு தான் காரணம். ஐநா கேட்டு கொண்ட போதிலும் போர் நிறுத்தப்படவில்லை.
ரத்தம் தோய்ந்த கரங்களுடன் ராஜபக்சே விடுத்த அழைப்பை ஏற்று தான் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றுள்ளனர். இது வெறும் கண்துடைப்பு. இதனால் எந்த பயனும் இருக்காது என்றார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications