அடுத்தடுத்து 5 ஏவுகணைகளை சோதித்த வட கொரியா
பியாங்யாங்: வட கொரியா நேற்று ஒரே நாளில் அணுஆயதங்களை ஏந்தி சென்று தாக்கும் திறன் படைத்த 5 ஏவுகணை சோதித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடன் சுமூக பேச்சுவார்த்தை துவங்கியுள்ள நிலையில் வட கொரியா இந்த சோதனைகளை செய்துள்ளது. இதற்கு தென் கொரியா கடும் அதிருப்தி வெளியி்ட்டுள்ளது.
இது குறித்து தென் கொரியாவை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில்,
வட கொரிய கேஎன் 02 வகை ஏவுகணைகள் ஐந்தினை சோதித்துள்ளது. இது தரையிலிருந்து சென்று தரையில் உள்ள இலக்கை தாக்ககூடியது. இவை அணு ஆயுதங்களை ஏந்தி சுமார் 120 கிமீ வரை செல்லக்கூடியது. இதன்மூலம் வடகொரியா, சியோலை தாக்க முடியும்.
இதன் மூலம் வடகொரியா, ஐநா விதித்துள்ள ஏவுகணை சோதனை தடையை மீறியுள்ளது. ஆனால், சோதனை வெற்றியடைந்ததா என்பது தெரியவில்லை.
ஏவுகணை சோதனை நடத்த வேண்டும் என்பதற்காக வட கொரியா தனது கிழக்கு மர்றும் மேற்கு கடற்கரை பகுதியில் கடந்த 10ம் தேதி முதல் வரும் 20ம் தேதி கப்பல் போக்குவரத்தை தடை செய்துள்ளது என்றார்.