புழல் சிறைக்குள் கஞ்சா வீசிய 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: புழல் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு கஞ்சா பொட்டலங்களை வீசிய இரண்டு பேரை போலீஸார் பிடித்தனர்.

புழல் சிறை கைதிகளை பார்க்க வருபவர்கள் சாப்பாடு பார்சல்கள், காலணிகள் ஆகியவற்றில் மறைத்து வைத்து கஞ்சா கொண்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு இதை தடுத்தனர்.

இந்நிலையில் புழல் சிறையில் நூதனமான முறையில் கைதிகளுக்கு கஞ்சா கொடுக்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதாவது சில கஞ்சா வியாபாரிகள் இரவு நேரத்தில் யாருமில்லாத சமயத்தில் சிறை சுவரின் வெளிப்புரத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களை தூக்கி போடுவதாகவும், அதை உள்ளே இருப்பவர்கள் எடுத்து கொள்வதாகவும் தெரிய வந்தது.

இதையடுத்து ஜெயிலர் இளவரசு மற்றும் சிறை காவலர் கந்தசாமி ஆகியோர் புழல் சிறையின் வெளிப்பகுதியில் ஒளிந்திருந்தனர். அப்போது நள்ளிரவு 11.30 மணிக்கு அங்கு பைக்கில் வந்த இரண்டு பேர் பைக்கை நிறுத்திவிட்டு சிறை சுவர் அருகே சென்றனர்.

பின்னர் கையில் வைத்திருக்கம் கஞ்சா பொட்டலத்தை சிறைக்குள் வீசி எறிந்தனர். இதையடுத்து அங்கு மறைந்திருந்த போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அப்போது காவாங்கரையை சிவராஜ் (27), விஜயகுமார் (23) என தெரியவந்தது.

போலீஸார் சிறைக்குள் வீசப்பட்ட கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+