தீபாவளி... 'குடி' மக்களுக்கு ஓர் நற்செய்தி..!

தமிழகம் முழுவதும் 6,699 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.13,500 கோடி வருவாய் கிடைக்கிறது. தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் வழக்கமான விற்பனையை விட மும்மடங்கு விற்பனையாகும்.
விழா நாட்களில் மது பிரியர்கள் விரும்பி குடிக்கும் சரக்குகளுக்கு தட்டுபாடு ஏற்படும். இதனால் குடிமகன்களும், கடை ஊழியர்களுக்கும் மோதிக் கொள்ளும் (பங்காளிச் சண்டை மாதிரிதான்- அடுத்த நாளே சாந்தமாகி விடுவார்கள்) நிலைமை ஏற்படும்.
இதை தவிர்க்க தீபாவளியை ஒட்டி மது வி்ற்பனை பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளதால் குடிமகன்களை குஷிபடுத்தும் வகையில் எல்லா வகை மதுவகைகளையும் விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், பீர், பிராந்தி வகைகள் வழக்கமாக கடைகளுக்கு அனுப்பபடுவதை விட 100 சதவீதம் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
எந்த சூழ்நிலையிலும் வாடிக்கையாளர் கேட்ட சரக்கு கடைகளில் இல்லை என்ற புகார் வரக்கூடாது என நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். பண்டிகை நாட்களில் பீர் வகைகளை காட்டிலும் பிராந்தி வகை மதுபானங்கள்தான் அதிகமாக விற்பனையாகும்.
எல்லா கடைகளுக்கும் இன்று முதல் மதுபானங்கள் தட்டுபாடின்றி கிடைக்க அனுப்பி வைக்கப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications