ஒபாமாவுக்கு நோபல் - பெரும்பாலான ஜூரிக்கள் ஆட்சேபித்தனர்!
ஆஸ்லோ: அமைதிக்கான நோபல் பரிசுக்குரியவரை தேர்ந்தெடுக்க நியமிக்கப்பட்ட ஐந்து நடுவர்களில் 3 பேர், பாரக் ஒபாமாவுக்கு பரிசு தருவதற்கு ஆட்சேபித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நார்வே நாட்டைச் சேர்ந்த வெர்டன்ஸ் கேங் என்ற இதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், நோபல் கமிட்டியில் இடம் பெற்றிருந்த நடுவர்களில் (ஜூரிகள்) பெரும்பாலானோர் ஒபாமாவுக்கு பரிசு தருவதற்கு முதலில் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். மொத்தம் இருந்த ஐந்து பேரில் 3 பேர் இதுபோல எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஒபாமா கூறிய திட்டங்கள் எதையும் இன்னும் அவர் முழுமையாக அமல்படுத்தவில்லை. அதன் விளைவுகளை இன்னும் உலகம் பார்க்கவில்லை. அதற்குள் எதற்காக அவருக்கு பரிசைத் தர வேண்டும் என இந்த மூன்று பேரும் கேட்டுள்ளனர்.
இருப்பினும் ஜூரி குழு தலைவர் மற்றும் இன்னொருவர் ஒபாமாவுக்கே பரிசைத் தர வேண்டும் என வலியுறுத்தியதைத் தொடர்ந்து, வேறு வழியில்லாமல் மற்ற 3 பேரும் தங்களது ஆட்சேபனையை வலியுறுத்தாமல் விட்டு விட்டனர் என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications