பத்திரிக்கையாளர் வழக்கு- நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்ய போலீஸுக்கு உத்தரவு
சென்னை: நடிகர், நடிகையர் மீது பத்திரிக்கையாளர் அமைப்புகள் கொடுத்த புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வருகிற 23ம் தேதிக்குள் இறுதி நடவடிக்கை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பத்திரிக்கையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஆபாசமாக வர்ணித்துப் பேசியதாக பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகி அன்பழகன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதில், நடிகர்கள் விஜயக்குமார், சத்யராஜ், சூர்யா, விவேக், நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் பத்திரிக்கையாளர்களையம், அவர்களது குடும்பத்தினரையும் மிகவும் தரக்குறைவாக, ஆபாசமாக பேசினர்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி உரிய வீடியோ ஆதாரத்துடன் சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரனிடம் புகார் தரப்பட்டது.
இருப்பினும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடக் கோரியிருந்தனர்.
இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், வருகிற 23ம் தேதிக்குள் இறுதி நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு அன்றைய தேதிக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.
-
ஒட்டுமொத்த ஊரே பார்க்க..பஸ் ஸ்டாண்டில் கணவன் செய்த செயல்! ஒரே நிமிடத்தில் எல்லாமே முடிஞ்சது! ஷாக் ! -
IPS Transfer: உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்.. 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு! -
டாஸ்மாக் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு.. மே 31 வரை மட்டுமே அவகாசம்.. தமிழக அரசை கண்டித்த உயர்நீதிமன்றம் -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம்












Click it and Unblock the Notifications