எண்ணூர் துறைமுகப் பணி: ஜப்பான் நிறுவனத்துடன் சிகால் லாஜிஸ்டிக்ஸ் ஒப்பந்தம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: எண்ணூர் துறைமுகத்தில் முழுக்க முழுக்க இயந்திரத்தால் கையாளப்படும் ஆட்டோமோடிவ் யார்டை கூட்டாகக் கையாள சென்னையின் சிகால் லாஜிஸ்டிக்ல் மற்றும் ஜப்பானின் மிட்சுயி ஓஎஸ்கே நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்த ஒப்பந்தப்படி ஓஎஸ்கே லைன்ஸ் நிறுவனத்தில் 45 சதவீதப் பங்குகளை சிகால் நிறுவனம் வைத்திருக்கும், மீதிப் பங்குகள் ஓஎஸ்கே லைன்ஸ் நிறுவனத்திடமே இருக்கும்.
அடுத்த ஆண்டு முதல் இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும் என சிகால் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எண்ணூர் துறைமுகத்தில் முழுவதுமாக இயந்திரத்தால் கையாளப்படும் யார்டு பகுதியை நிறுவும் பணியில் ஈடுபடும் இந்த இரு நிறுவனங்களும், பணிகள் முடிந்ததும் இணைந்து அதை கையாளப் போகின்றன.
இதன் மூலம் ஆட்டோமொபைல் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் பயனடைவார்கள்.












Click it and Unblock the Notifications