For Quick Alerts
For Daily Alerts
Just In
ஹிஸ்பானோ கேரோசராவை வாங்கியது டாடா மோட்டார்ஸ்
டெல்லி: ஸ்பெயின் நாட்டின் பஸ் மற்றும் கோச் தயாரிப்பு நிறுவனமான ஹிஸ்பானோ கேரோசராவை முழுமையாக கையகப்படுத்தியுள்ளது டாடா மோட்டார்ஸ்.
ஏற்கனவே ஹிஸ்பானோ நிறுவனத்தின் 21 சதவீத பங்குகளை வாங்கியிருந்தது டாடா. இந்த நிலையில் தற்போது மீதமுள்ள 79 சதவீத பங்குகளையும் டாடா மோட்டார்ஸ் வாங்கி விட்டது.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஹிஸ்பானோ நிறுவனத்தின் 21 சதவீத பங்குகளை கடந்த 2005ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் வாங்கியது.
தற்போது மீதமிருந்த 79 சதவீத பங்குகளையும் டாடா மோட்டார்ஸ் வாங்கியுள்ளது. இதன் மூலம் ஹி்ஸ்பானோ நிறுவனத்தை முழுமையாக டாடா மோட்டார்ஸ் கையகப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த டீல் எந்தத் தொகைக்கு முடிந்தது என்பதை டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கவில்லை.
Comments
Story first published: Wednesday, October 21, 2009, 10:56 [IST]