அதிமுகவுடன் கூட்டணியே இல்லை-சிபிஐ

சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
அடுத்த ஆண்டு கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கலந்து கொள்ளும். இதில் அதிமுக, மதிமுக பங்கேற்கவில்லை என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில்தான் நாங்கள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளோம். மற்ற மாநிலங்களில் தேர்தல் நேரத்தில் ஏற்படும் உடன்பாடுதான், கூட்டணி அல்ல.
அதிமுகவுடனும் தொகுதி உடன்பாடு தான் வைத்திருந்தோம். அது கூட்டணி அல்ல. தேர்தல் நேரத்தில் அந்த அணி உருவாக்கப்பட்டது. தேர்தலோடு அந்த உடன்பாடு முடிந்துவி்ட்டது.
பொதுவான பிரச்சனைகளுக்காக இந்திய கம்யூனிஸ்டு எந்தக் கட்சியுடனும் இணைந்து போராடும்.
முல்லைப் பெரியாறு அணை இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனை. இதை நீதிமன்றம் மூலமோ அல்லது இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை மூலமோ தான் தீர்க்க வேண்டும். அதற்குரிய சூழ்நிலையை மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.
கர்நாடகாவில் திருவள்ளுவர் சிலை திறந்து அண்ணன்-தம்பி உறவு மேம்பட்டது போல கேரளாவிலும் அந்த முறையை பின்பற்ற வேண்டும்.
உத்தரப் பிரதேசத்தில் நடந்த ரயில் விபத்துக்கு எங்கள் கட்சி வருத்தம் தெரிவித்துகிறது. ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நிர்வாகத்தை பார்ப்பதை தவிர வேறு எல்லா வேலைகளையும் பார்த்து வருகிறார். அவர் டெல்லியில் இருக்கும் நேரமே மிகக் குறைவு.
கச்சத் தீவில் தமிழக மீனவர்களுக்கு உரிமையை பெற்றுத்தர திமுக வலியுறுத்தாமல் தட்டிக்கழிப்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications