For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தயாரிப்பாளர் என்று கூறி பண மோசடி - பெண் கைது

Google Oneindia Tamil News

தேனி: திரைப்படத் தயாரிப்பாளர் எனக் கூறி பண மோசடி செய்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் கீழ்விலாசம் சலீம் நகரைச் சேர்ந்தவர் ராகுல் (25). இவரிடம், போடி பெரியாண்டவர் ஹைரோடு, போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த ராஜேஸ்வரி (43), தன்னை சினிமா தயாரிப்பாளர் என கூறினார்.

இதை நம்பிய ராகுல், நத்தம் என்ற பெயரில் தான் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்ததைத் தெரிவித்தார். அந்தப் படத்துக்கு முதலீடு செய்வதாகக் கூறிய ராஜேஸ்வரி, ராகுல் நடிப்பதாகக் கூறியதால் அவரிடம் படத்தயாரிப்புக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கேட்டார்.

முதற் கட்டமாக மே 10 ல், நான்கு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாவதாக மே 20 ல், 40 ஆயிரம் என மொத்தம் நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ராஜேஸ்வரியின் வங்கி கணக்கில் செலுத்தினார்.

பணத்தை பெற்றுக் கொண்ட ராஜேஸ்வரி, சென்னை லாட்ஜில் தங்கி ஸ்டோரி டிஸ்கஷன் என்ற பெயரில் ஒறு தொகையைக் காலி செய்தார். அதைத் தொடர்ந்து அப்படியே விட்டு விட்டார். படத் தயாரிப்பு தொடர்பாக எதுவுமே அவர் செய்யவில்லை.ய

இதனால், கொடுத்த பணத்தை ராகுல் கேட்ட போது தர முடியாது என்று ராஜேஸ்வரி கூறியுள்ளார். இதையடுத்து ராஜேஸ்வரி, அவரது மகன் அருண்பிரசாத் மற்றும் நான்கு பேர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ராகுல் புகார் செய்தார்.

புகாரைப் பெற்ற போலீஸார் ராஜேஸ்வரியைக் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X